10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சக்தி சக்திதாசன்
மூண்ட தீ
முன்னை ஒரு பொழுதில்
ஈழத்திலே என்றெமக்கு
இயம்பியதோ இராமாயணத்தில்
மூண்ட தீ
அதனை மூட்டுவோர்
ஆயிரம் காரணங்கள்
ஆயினும் ஆகாதென்பது நீதி
மூண்ட தீ
தாண்ட முடியாத
தடைச்சுவர் எழுப்பியெமை
தாளாத சுமைக்குள் தள்ளியதே !
மூண்ட தீ
முழுதாய் எரித்தது
காலங்களாய் வாழ்ந்திட்ட
நூலகச் சொத்துக்களை
மூண்ட தீ
மூட்டியது பேதத்தை
முற்றும் அழித்தது எமது
முழுதான சகோதர வாஞ்சையை
மூண்ட தீ
ஆண்ட. வர்க்கத்தினரின்
ஆற்றாமை காட்டியெமையே
ஆறாத்துயரில் வீழ்த்தியது
மூண்ட தீ
நெஞ்சத்தை எரித்திடினும்
வஞ்சத்தைத் தாண்டி காண்போம்
கொஞ்சமேனும் அமைதியெம் வாழ்வில்
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...