பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

நீலவான முன்றலிலே
முழுநிலவின் வெளிச்சத்தில்
மின்னுகின்ற தோரணங்கள்
கண்சிமிட்டிக் கதை கூறும்

மூடுகின்ற விழிகளுக்குள்
முழுவர்ணக் கனவுகளாய்
முப்பரிணாம காட்சிகளாய்
முடிச்சவிழ்க்கும் நினைவுகள்
சுட்டெரிக்கும் கதிர்களோடு
சூரியனின் சுற்றுப்பயணம்

விட்டகழும் பனிப்புகார்கள்
விரைந்தோடும் காலைகள்
புதியதோர் விடியலிது
புதியதொரு பயணமிது

பிறக்குமொரு புத்துணர்ச்சி
புதுமுயற்சி புதுத்துணிவு
எம்விடியல் எம்கையில்
எதுக்கிங்கே ஏக்கங்கள் ?

விழுவதெல்லாம் எழுவதற்கே
விளைந்ததெல்லாம் அனுபவமே !

விதைத்தவைகள் நன்மையெனில்
அறுப்பதுமே நன்மைகள்தான்
கதைகளுக்கு முடிவுண்டு
காலத்திற்கோ எல்லையில்லை
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading