பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

என்னைப் பற்றிய
எனது குறிப்புகளை
எங்கோ தொலைத்து விட்டேன்
எழுத்து எனும் வெளிச்சத்திடு
என்னைத் தேடிக் கொண்டே !

முன்னை ஒரு பிறப்பில்
என்னைக் கண்டதாக
சொன்ன ஒருவரின்
சொற்களுக்குள் நானெங்கோ
சிக்கியிருக்கிறேனோ ?

விண்ணை நோக்கினேன்
விசாலமாய் ஒரு உருவம்
விளக்கியது வாழ்க்கைக் கோலத்தை
வித்தியாசமானவனல்ல நீ !
விசித்திரமான ஒரு அறிவுக்குருடனே !

நின்னைப் புரிந்திடாமல்
நிந்தன் பாத்திரத்தைக் அறிந்திடாமல்
வேடம் கலைந்து விட்டால்
ஏதுமற்ற ஓர் ஆன்மா எனப் புரியாத
ஞானச்சூனியத்துள் புதைந்தவனே நீ !

சொன்ன விளக்கங்களால்
என்னுள் புரளுகின்ற
எண்ண அலைகளினுள்
மிதக்கும் படகாக தெரிவதொன்றே
மீதமிங்கு ஆன்மாவென்பதுவே !

எழுத்துகள் முடிவதில்லை
எண்ணங்கள் ஓய்வதில்லை
எந்தன் தேடல்கள் மாய்வதில்லை
உணர்ந்ததை எழுத்தாக்கித் தாளில்
உண்மையை வடித்திடுவேன்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan