சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 கவியரசர் கண்ணதாசன்
கலைத்தாயின் பெருமைந்தன்
சிலையாக்கும் சிற்பியைப்போல்
சிறப்பான கவிவடித்தார்

முத்தான எழுத்துகள்
முத்தமிழின் வனப்பாக
முத்தையா வடித்ததினால்
முத்தெனவே மிளிர்கின்றார்

கவிதைகள் ஓராயிரம்
கட்டுரைகள் ஓராயிரம்
காவியங்கள் பலநூறு
கவியரசர் படைத்திட்டார்

அரசியலில் வனவாசம்
ஆன்மீகத்தில் மனவாசம்
அர்த்தமுள்ள இந்துமதம்
அத்தனையும் முத்துக்கள்

கவியரசர் நினைவுவாரம்
கவிமாலை நான்கிதுவே
கவித்துவத்து அஞ்சலிகள்
கண்மூடித் துதிக்கின்றேன்

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading