” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 கவியரசர் கண்ணதாசன்
கலைத்தாயின் பெருமைந்தன்
சிலையாக்கும் சிற்பியைப்போல்
சிறப்பான கவிவடித்தார்

முத்தான எழுத்துகள்
முத்தமிழின் வனப்பாக
முத்தையா வடித்ததினால்
முத்தெனவே மிளிர்கின்றார்

கவிதைகள் ஓராயிரம்
கட்டுரைகள் ஓராயிரம்
காவியங்கள் பலநூறு
கவியரசர் படைத்திட்டார்

அரசியலில் வனவாசம்
ஆன்மீகத்தில் மனவாசம்
அர்த்தமுள்ள இந்துமதம்
அத்தனையும் முத்துக்கள்

கவியரசர் நினைவுவாரம்
கவிமாலை நான்கிதுவே
கவித்துவத்து அஞ்சலிகள்
கண்மூடித் துதிக்கின்றேன்

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan