” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

தீபஒளியொன்று நெஞ்சில்
தீந்தமிழாய் ஒளிருது
தீயதெம் எண்ணங்களை
தீயுக்கு இரையாக்குது

ஊரெல்லாம் வெடிச்சத்தம்
உள்ளங்கள் குதூகலிக்கும்
உலகத்தின் ஓரோரத்தில்
உரசுகின்ற அழிவுகள்

நானென்றும் எனதென்றும்
நாம்கொள்ளும் எண்ணங்களை
நெஞ்சிலேயே எரித்திடட்டும்
நிறையுமிந்த தீபஒளி

அசுரனை அழிக்கவில்லை
ஆண்டவன் இத்திருநாளில்
அரக்க எண்ணங்களையே
அழித்திட ஆணையிட்டார்

புதுத்துணி அணிவதெல்லாம்
பொழிவினைக் காட்டஇல்லை
பழையவையாம் தீயவைகள்
பறந்தததைக் காட்டிடவே

திருநாட்கள் அத்தனையும்
தேவைதான் வாழ்க்கையிலே
தருமவையின் அர்த்தங்களைத்
தவறின்றிப் புரிந்திட்டால்

அன்பினிய உறவுகளே
அனைவருக்கும் வாழ்த்துகள்
அகிலமெங்கும் ஒளிரட்டும்
அன்பெனும் தீபஒளியே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan