மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

“பறக்கும் வேளை”

மிதக்கின்ற விமானத்தினுள்
பிறக்கின்ற கவிதையொன்று
கருக்கொண்ட மேகங்களாய்
கரைகின்ற சொற்துளிகள்

தவழ்கின்ற மேகங்களை
தழுவுகின்ற நினைவுகள்
தமிழாக இசைக்கின்ற
தனியான இராகமிது

எந்தையும் தாயுமிங்கு
என்னோடு பறப்பாரொ ?
எண்ணத்தின் மூலமாய்
ஏதேதோ சொல்வாரொ ?

காற்றோடு காற்றாக
காததூரப் பயணமிது
நேற்றோடு கலந்திட்ட
நினைவுகளோ சுமையாக

விழிமூடும் வேளையிலும்
விழிதிறக்கும் பொழுதிலும்
உள்ளமெல்லாம் தமிழ்தானே !
உயிர்த்துடிப்பும் அதுதானே !

இங்கிலாந்து நினைவுகளை
இந்தியாவில் தரையிறக்கும்
இணைக்கின்ற பாலமாக
இருப்பதெல்லாம் தமிழ்தானே !

கவிஞனாக எண்ணவில்லை
கவிதையென்று கொள்ளவில்லை
மனிதனிவன் நீலவானில்
மிதக்கின்ற புலம்பலிது

விஞ்ஞான விந்தையதில்
விளைந்ததிந்த விமானத்தில்
அஞ்ஞான மனிதனிவன்
மெய்ஞானம் காண்பதெப்போ ?

விடிகின்ற பொழுதிலெல்லாம்
வடிக்கின்ற கவிதைகளாய்
முடிக்கின்ற வாழ்க்கையதில்
முடியாத கேள்விகளாய் . . . . .

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading