” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

வசந்தத்தில் ஓர் நாள்
“சந்தம் சிந்தும் சந்திப்பு”

கண்களை மூடிகொண்டே
பயணங்கள் பாதிவரை
விழித்தபோது
வசந்தங்கள் விரைவாய்
மறைந்து விட்டன

தீக்குள் விரலை
வைத்து கைகளைச்
சுட்டுக் கொண்டு
விதியின விளையாட்டுத்தான்
இது என ஓர்வாதம்

குளிர்காலத்தில்
நிர்வாணமாயும்
கொதிக்கும் வெய்யிலில்
ஜந்து சுற்று ஆடைகளுடனும்
வலம் வரும்
வியப்பான விவேகங்கள்

காவியம் இது எனக்
காதல் பேசிப் பின்
கல்யாணமானதும்
விவாகத்தை ரத்துச்
செய்யவென
நீதிமன்றம் ஏகும்
நியாயங்கள்

ஏழையின் உலகில்
ஏற்றமுண்டாக்க
மாற்றத்தை விரும்பா
பொதுநலவாதிகள்

பெண்களை காட்சிப்
பொருட்களாக்கி
பொன்னும் மணியும்
அவர்க்குப் பூட்டி
தன்வழி சிந்திக்கும்
உரிமைதராது மறுத்து
எமதுலகம் ஏன் இன்னும்
எழிலான பாதையில்
அடியெடுக்கவில்லை
என புரியாமல் குழம்பும்
ஆட்டு மந்தைக் கூட்டம்

சுழலுது இந்தப் பூமி
துங்குதெங்கள் சாமி
உண்மை மனிதனைக் காமி
உள்ளம் சிரித்திடும் அத்தேதி

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan