சக்தி சக்திதாசன்

நினைவுகளால் வதைக்கிறாய்
கனவுகளால் வருடுகிறாய்
இருவேறு உலகத்தினுள்
இதயத்தைப் பிழிகின்றாய்

பார்வையால் கொன்றிட்டு
புன்னகையால் உயிர்ப்பிக்கிறாய்
ஞாபகங்களால் சூடேற்றி
நாணத்தினால் குளிரூட்டுகிறாய்

பனியாக உறையவைத்து
பகலவனாய் உருக்குகிறாய்
நெருங்கையிலே தென்றலாகி
நகர்கையிலே புயலாகிறாய்

காதலெனும் மூன்றேழுத்தாய்
காளயின் இதயத்திலேதுளிர்த்து
மோகமெனும் மூன்றெழுத்தால்
மோதியேனோ கொல்கிறாயே !

புதைத்திட்ட விதையான
பாவையுந்தன் பார்வையது
விருட்சமென விரிந்தின்று
விழுங்கிட்டதென் நெஞ்சை

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading