சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“வேலும் மயிலும்”
————-
வேலும் மயிலும்
வேண்டும் மனதில்
வினையும் களையும்
விருப்பம் விளையும்

அச்சம் அகலும்
அசலும் அசரும்
அய்யன் முருகன்
அருளால் நிறையும்

அலையும் மனமும்
அமைதி அடையும்
அற்புத நிகழ்வுகள்
அனைத்தும் நிகழும்

திருத்தணி வாழும்
திருமுருகன் துணை
திறந்திடும் கதவுகள்
திக்கெட்டும் முழங்கும்

பழனியில் உறையும்
பரமனின் மைந்தன்
பார்வதி பாலனின்
பாதங்கள் சரணம்

அப்பன் முருகன்
அவனருள் வேண்டி
அடி தொழுதிடுவேன்
அடியேன் வணங்கி

நல்லைக் கந்தன்
எல்லையில் பிறந்தேன்
தொல்லைகள் அகன்றிட
தொழுவேன் சேயோனை

ஆறுமுகங்கள் கொண்டு
ஆறிரண்டு கரங்களினால்
அணைத்திடும் அழகனவன்
ஆனைமுகன் தம்பியவன்

தெய்வயானையோடு வள்ளியும்
சேர்ந்தெம்மைக் காத்திடவே
சேவல்கொடியோன் மயிலோனை
சேவிப்போம் அனுதினமும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading