09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
“வேலும் மயிலும்”
————-
வேலும் மயிலும்
வேண்டும் மனதில்
வினையும் களையும்
விருப்பம் விளையும்
அச்சம் அகலும்
அசலும் அசரும்
அய்யன் முருகன்
அருளால் நிறையும்
அலையும் மனமும்
அமைதி அடையும்
அற்புத நிகழ்வுகள்
அனைத்தும் நிகழும்
திருத்தணி வாழும்
திருமுருகன் துணை
திறந்திடும் கதவுகள்
திக்கெட்டும் முழங்கும்
பழனியில் உறையும்
பரமனின் மைந்தன்
பார்வதி பாலனின்
பாதங்கள் சரணம்
அப்பன் முருகன்
அவனருள் வேண்டி
அடி தொழுதிடுவேன்
அடியேன் வணங்கி
நல்லைக் கந்தன்
எல்லையில் பிறந்தேன்
தொல்லைகள் அகன்றிட
தொழுவேன் சேயோனை
ஆறுமுகங்கள் கொண்டு
ஆறிரண்டு கரங்களினால்
அணைத்திடும் அழகனவன்
ஆனைமுகன் தம்பியவன்
தெய்வயானையோடு வள்ளியும்
சேர்ந்தெம்மைக் காத்திடவே
சேவல்கொடியோன் மயிலோனை
சேவிப்போம் அனுதினமும்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...