” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“வேலும் மயிலும்”
————-
வேலும் மயிலும்
வேண்டும் மனதில்
வினையும் களையும்
விருப்பம் விளையும்

அச்சம் அகலும்
அசலும் அசரும்
அய்யன் முருகன்
அருளால் நிறையும்

அலையும் மனமும்
அமைதி அடையும்
அற்புத நிகழ்வுகள்
அனைத்தும் நிகழும்

திருத்தணி வாழும்
திருமுருகன் துணை
திறந்திடும் கதவுகள்
திக்கெட்டும் முழங்கும்

பழனியில் உறையும்
பரமனின் மைந்தன்
பார்வதி பாலனின்
பாதங்கள் சரணம்

அப்பன் முருகன்
அவனருள் வேண்டி
அடி தொழுதிடுவேன்
அடியேன் வணங்கி

நல்லைக் கந்தன்
எல்லையில் பிறந்தேன்
தொல்லைகள் அகன்றிட
தொழுவேன் சேயோனை

ஆறுமுகங்கள் கொண்டு
ஆறிரண்டு கரங்களினால்
அணைத்திடும் அழகனவன்
ஆனைமுகன் தம்பியவன்

தெய்வயானையோடு வள்ளியும்
சேர்ந்தெம்மைக் காத்திடவே
சேவல்கொடியோன் மயிலோனை
சேவிப்போம் அனுதினமும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan