30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 278. காலை மலர்ந்து விட்டது
கனவுகள் கலைந்து விட்டன
கண்கள் விழித்துக் கொண்டன
கடமைகளை முடிக்க முனைந்திடுவோம்
எம்மைச் சுற்றி எத்தனையோ
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்
எண்ணங்களே வாழ்க்கை எனும்
ஏற்றமிக்க நம்பிக்கை ஒளிரட்டும்
நல்லவற்றை எண்ணத்தில் விதைத்தால்
நன்மையே விளையுமெனும் உண்மையை
நெஞ்சினில் கொண்டு உள்ளத்தை
நிறைப்போம் மகிழ்வுக் கணங்களால்
நிகழ்ந்தவற்றைக் கிடப்பில் போட்டு
நடப்பவற்றை மகிழ்வுடன் ஏற்று
நாளைகளை நம்பிக்கையுடந் நோக்கி
நடந்திடுவோம் வெற்றியாய் வாழ்வில்
நடந்தவை அனைத்துமே நன்மைக்கே
நடந்தவை என்பதை ஏற்றிட்டால்
நடப்பவை எல்லாமே எப்போதும்
நன்மையாய் நடப்பதே சத்தியம்
அவனியில் ஆன்மாவின் சாத்திரம்
அனுபவத் தேடலின் யாத்திரை
ஆன்மீக அறிவியல் மாத்திரம்
அழியாத ஆன்மாவின் செல்வமே
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...