” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்தி தாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 237
“மனந்தான் எல்லாம்”
“என்னைத் தேடி வந்த‌
துன்பமிக்க கணங்களே !
உங்களௌ வெறுக்கவில்லை
பணிவாகத் துதிக்கிறேன்
வாழ்வின் அர்த்தத்தை
வளமாகப் புகட்டிய‌
உன்னத ஆசிரியர்கள்
அல்லவா ?

என்னைத் தேடி வந்த‌
இன்பமிக்க வினாடிகளே !
உங்களை நான் போற்றுகிறேன்
தகுதியில்லா வாசலுக்குள்
தானாக வந்த நீங்கள்
தங்கமான தருணங்கள்
அல்லவா?

என்னை வாட்டிய உறவுகளே
நீங்கள் மீட்டியது கூட‌
ஒருவித ராகமே !
இன்றும் என் மனதில் ஏனோ
ரீங்காரமிட்டுக்
கொண்டிருக்கின்றன‌

என்னைத் தாங்கிய
உள்ளங்களே !
உங்களுக்காக என்
கண்களில் இருந்து
சொட்டுவது அன்புடன்
கலந்த‌ நன்றிமுலாம்
பூசிய ஈரத்துளிகள்
எத்தனை பெரிய சுமையை
இத்தனை சிறிய இதயத்தினுள்
தாங்கிக் கொண்டீர்கள் …….
நீங்கள் மகத்தானவர்கள் !

வார்த்தைகளின் ஓசை
அடங்கி விட்டால்,
அங்கே
மெளனமே மொழியாகிறது.

உள்ளத்தின் உள்ளே
உருளும்
உண்மைகள் கொஞ்சம்
உரசத் தொடங்கினால்,
உதடுகளின் வழியே
உதிர்க்கப்படாத வார்த்தைகள்
மெளனமாய் மனதினுள்
மரணித்துப்
போய்விடுகின்றன.

சொல்லாத சொல்லுக்கு
விலையை நிர்ணயிக்க முயலும்
வியாபாரக் கூட்டத்தின் நடுவே
பாசமும்,பந்தமும்
பயனற்றுப்
போய்விடுகின்றன

அப்போதும்
அங்கு துணை வருவது
மெளனம் தானே ………”
-சக்தி சக்திதாசன்-

Nada Mohan
Author: Nada Mohan