பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
தியாகமே தீர்ப்பானதா
***************************
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நன்றி வானிலும்
நனி சிறந்தனவே !
தேசத்தை நேசித்த நெஞ்சம் கொண்டு
பாசத்தைக் துறந்தான் பார்த்தீபன்!
ஊரெழுவில் அவதரித்து
உலகமே பேர் சொல்லும்படி
உன்னதமெனப் போற்றும் கொள்கைக்காக
பசித்திருந்தான் பன்னிரு நாட்கள்
பாதகம் செய்தது பாரதம்
ஆதரவின்றி ஆகுதியானான்
மெழுகுவர்த்தியாய் உயிர்த்தியாகம் செய்தும்
மக்கள் புரட்சி வெடித்தும்
துக்கம் இன்றும் தொடர்கதையாய்……
அவன்போல் எத்தனை எம்மின ஆத்மாக்கள்
செய்த தியாகம் இன்னும் தணியாத தாகமாய்
தீர்ப்பில்லா தியாகங்களாய்
எம்மினத்தின் சாபமோ இது?

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள். திரு.திருமதி நடா மோகன் அவர்கட்கு மிக்க நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan