சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
தமிழுக்கும் அமுதென்று பெயர்!
அறுசீர் விருத்தம்

வல்லினம் மில்லினர் இடையினம்
வகைகளும் கண்டது தமிழ்மொழி
பல்வகைப் பாக்களும் பாடினர்
பாமரர் விளங்கவும் செய்தனர்
தொல்பொருள் ஆய்விலே முதலிது
தோற்றமும் பெற்றதே தமிழ்மொழி
கொள்கையைக் குருதியில் கொண்டவன்
கொற்றவன் சபையிலே முதலிது!
தரணியில் தரமுடைத் தமிழ்மொழி
தந்திடும் இன்பமும் தேனது
பரணியும் பாடிட பக்தியே
பாரதி வள்ளுவன் பெருமையும்
உரமது தந்திடும் உத்தமர்
உயர்ந்தனர் உலகமும் அறியவே
வரமெனப் பெற்றது வாகையே
வாழ்த்துவோம் உலகெலாம் முழங்கவே!
இரத்தமும் ஆகும்? இல்லையே
அறம்செய விரும்பென அவ்வையும்
உரக்கவே சொன்னவள் அத்துடன்
ஊக்கமும் கைவிடேல் என்றவள்
சிரமமும் இல்லையே சிற்பமாய்
செந்தமிழ் வாழுமே என்றுமே
மரபினைக் கற்கவே மனங்களும்
மலருமே அமுதெனப் பருகவே!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

ப.வை.அண்ணா! உங்கள் பாரிய பணிக்கு மிகுந்த வாழ்த்துகள். திரு.நடா மோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading