26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
இயற்கையே இன்பம்!
அன்னை போலே இயற்கை இருக்க
என்ன துன்பம் எதுவாய் இருப்பினும்
நின்று ரசிக்க நிதர்சனம் இயற்கையே
இறைவன் படைப்பில் இயற்கை நன்றே
குறைகள் இல்லை குவலயம் மகிழ
நிறைவாய்த் தந்தார் நிம்மதி உண்டே!
மலர்கள் அழகு மனத்தில் மகிழ்ச்சி
பலவகை இனங்கள் பாரினில் கண்டோம்
உலகமும் உவக்க உகந்தது இயற்கையே
மல்லிகை மலரும் மயக்கமும் தருமே சொல்லிட முடியா சுகந்திரம் வீசும்
நல்லதோர் மலரே நங்கைகள் அணியே
முல்லைக் கொடியும் முற்றம் படர்ந்து
எல்லை இல்லா இன்பம் தருமே
சொல்லிக் அடங்கா சொர்க்கம் அதுவே!
அருவியின் ஓசை அகத்தினை நிறைக்கும்
குருவிகள் கூடிக் குளிப்பதும் அழகே
தருக்களும் ஆங்கு தந்திடும் சுகமே
வியக்கும் வகையில் விரிந்தே இருக்கும்
பயக்கும் நன்மை பாரில் அதிகம்
இயற்கை சோலை இங்கிதம் ஆகுமே!
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...