” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
குழலோசை!
***************
நினைத்தாலே இனிக்கும்
அந்தக் குழலோசை
தெவிட்டாது செவிகளில்
விழுந்த அந்தக்குழலோசை!
மீட்டிப்பார்க்கையில்
என்ன அனந்தம்!
சின்னஞ்சிறு வயசு
கள்ளக்கபடமற்ற மனசு
துள்ளிக் குதித்துத் திரிந்த பருவம்
அள்ளி அணைத்த
அந்தக்குழல்
பூவரசமிலைக் குழல்
அக்கம்பக்கம் வாழ்ந்த
உறவுச் சிட்டுக்கள்
போட்டி போட்டுக்கொண்டு
ஊதிய குழவோசை இன்னமும் இனிக்கிறது!
அம்மன்கோவில் பிள்ளையார் கோவில்
ஆ… சும்மா செல்லக்கூடாது
எம்மாத்திர இனிமை
அந்த வித்துவான்கள்
பக்திப் பரவசம் பொங்க
பக்கவாத்தியக் கலைஞர் புடைசூழ
நாதஸ்வரக்குழலோசை
கீதம் இசைத்த அந்தக் கணங்கள்
நினைத்தாலே இனிக்கிறது!

Nada Mohan
Author: Nada Mohan