” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
கலவரம்
**********
கருத்துகள் முரண்படும் காரியம் தடைபடும்
செருக்குடன் இருப்பர் செய்வனே செய்யார்
அருவருக்கும் ஆட்சி ஆளணி நெறிமுறை
உருக்குலைய வைக்கும் உலகையே உலுப்பும்
கலகம் உண்டாக்கிக் கவிழ்த்துப் போடுவர்
அலசல் ஆயிரம் அவைகளில் அரங்கேறும்
விலகவும் மாட்டார் வீணிலே வாதமும்
சலனமும் நிறைந்து சமுகம் உடைபடும்
கவலையும் கொள்ளார் கலவரம் பெருகினும்
அவதிகள் பட்டே ஆண்டிகள் ஆகிடும்
மக்களைக் காத்திட மகேசனின் அருளே
இக்கணம் உறுதி
இயம்புவேன் நானே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan