சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி சுமந்த கருக்கதை சுகப்படாது போனதடா தம்பி வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி சுயசெலவில் வந்திடுவேன் சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும் தாயகம் திரும்பிடுவேன் _ தம்பி உழைத்திடும் உள்ளமுண்டு உடலில் பலமில்லை _ தம்பி பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ _ தம்பி ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள் தொடரட்டும் _ தம்பி 🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம்

கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி
சுமந்த கருக்கதை
சுகப்படாது போனதடா தம்பி

வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி
சுயசெலவில் வந்திடுவேன்
சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி

விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும்
சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும்
தாயகம்
திரும்பிடுவேன் _ தம்பி

உழைத்திடும் உள்ளமுண்டு
உடலில் பலமில்லை
_ தம்பி

பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ
_ தம்பி

ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை
விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி

ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி
பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள்
தொடரட்டும் _ தம்பி

🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading