பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

இதுதான் உலகம்

கற்றுணர்ந்தான் திருவள்ளுவன்
கனி வாய் சொன்னான் திருக்குறளில்
நீதி நிலை பெற்றிட வென்றும்
நீவி விட்டாள் ஔவைப்பாட்டி .

கொற்றம் தளைக்க வேண்டுமென்று -அன்று
நீதி தவறாத மன்னர்களாட்சி .
பேராசை கவி சூழ்ந்ததினால்
பேரழிவுகள் நேர்வது இந்தக் காலம்.

கற்புடமையென்று கண்ணகியும்
மதுரையை எரித்தது சரித்திரமாம்
கற்பின் மகிமை புரியாமல்- இன்று
காலம் சுழன்று நிற்கிறது பார்

சாரம் போட மரமில்லை
சாதித்து நிற்க துணிவில்லை
கொடுப்பார் யாரெனக் கைநீட்டி
கொண்டாட்டம் போடுவார் பாரினிலே,

பசித்தவன் பார்த்து நிற்க்கையிலே
கொடுத்தவன் கை நீட்டிக் கொள்கையிலே
அடுத்தவன் பறித்துப் போகின்றான்
இதுதான் உலகம் புரிந்து கொள்….

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading