அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

குழல் ஓசை

ஏழுஸ்வரங்களிலெத்தனை இன்பம்
இனிய கீதங்களைக் கேட்கும்போது எத்தனை மாற்றம்
புதிய கீதை வந்தது போல் புல்லாங்குழலோசை
புவி விளங்க வந்ததுவே காக்கும் அவன் கரத்தில்

கார்குழலில் வண்டார்ப்ப
கண்ணன் கரத்தில் புல்லாங்குழலாப்பர்
ஆயர்பாடியில் தாலேலோ
ஆனந்தக் குழலோசை கேட்டிடுமே

பிருந்தாவனம் போல் நம்மனமும்
பிரியாமல் குழலோசையில் மயங்கிடுமே
கவலை கொண்டு தானிருந்தாலும்
கானம் கேட்டதும் கனிந்திடுமே

குழலிசை ,யாழிசை, நாதஸ்வர இசை
குழலிலசை நாதத்தை தட்டும் மோசை
இயலிசை நர்த்தனமாடிடுமே
இதய ராகம் மிதந்திடுமே

கல்தோன்றி மண்தோன்றி மனிதன் தோன்றும் போதே
கானங்களின் ஓசைகளும் கலந்து நின்றது
கல்லும் கனியும் தேவ கானம் கேட்டால்
காலத்தில் கீதமாய் பரவியது குழலோசையுமே.

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading