சாளரத்தின் ஒளியினிலே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-35
19-09-2024

சாளரத்தின் ஒளியினிலே..

சேவல்கள் கூவுவதும்
சேவைகள் தொடங்குவதும்
காக்கைகள் கூடுவதும்
காவல்கள் முடிவதுவும்!

கதிரவனின் வருகையிலே
காத்திருந்த பனி விலக
கண் கண்ட குளிர்ச்சியிலே
கனம் கொண்ட மனம் அகல

சாளரத்தின் ஒளியினிலே
சகதி வாழ்க்கை வேண்டாமென
உறக்கத்தை தொலைத்து
உறவுக்காய் உணவு தேடி

வரவிற்கேற்ப செலவு செய்து
வாஞ்சையோடு கொடுத்துதவி
நேர்மையோடு வாழ்ந்திட
நலிந்திடும் வலிகளெல்லாம்!

ஏழையென்ற பேச்சும் வேண்டாம்
எதற்காகவும் முனகல் வேண்டாம்
முயற்சி ஒன்றை மூச்சாய் கொண்டு
முன்னேறி நாமும் விடுவோம் .

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan