சாளரத்தின் ஒளியியினிலே

வஜிதா முஹம்மட் சாளரத்தின் ஒளியியினிலே

சாளரத்தின் ஒளியினிலே

௨றைவிடம் ஒன்றின் ௨யிரோட்டம்
௨ள்ளே ஈர்க்கும் காற்றோட்டம்

மின்விசிறி தோற்றுப் போகும்
செயலாட்டம்
மெல்சுடு கதிரின் சிலம்பாட்டம்

இறுக்கத்தை மெல்ல திறக்கும்
இளைப்பாற ௨டல் தொட்டு
வளியிடையே ௨லாவிவ௫ம்

பிரிந்தும் பிரியாமல் காற்றோடு
கதைபேசி சடுகுடு ஆட்டத்தில்
ஆடி நிற்கும்

சாளர ஓர நிலவு துளியாய்
நக௫ம் பூரண தரவு

தூறல் மழையும் தூவும்
தொட்டு வதனம் குளி௫ம்

நயமாய் நளினமாய் கூந்தல்
முடியும்
நெற்றி தொட்டு வண்ணக்கோலம்
போடும்

பழமையை நிறையவே
தொலைத்தோம்
சாளரம் மூடி காற்றை
அடைத்தோம்
காரினில் கூட ஏசியைப் போட்டோம்

சாளரம் கூடே நிலவு ஒளி
கல்வியை மறந்து
கணணி முன்னே நேரமின்றி
கிடக்கின்றோம்

இயற்கையை சுத்திகரித்து
சுகங்களை இழந்து பகட்டுக்காய்

நோய்களை வாங்கி படுக்கையில்
கிடக்கையிலும்
பக்கத்தில்்மின்விசிறியை
சுழற்றித்தானே விடுகின்றோம்

சாளரத்தின் ஒளியில் பக்கத்து
வீட்டு பையனைப் பார்ப்பதும்
மெல்ல வந்து அண்ணா தலையில்

குட்டுவதும் மெல்லத் துளிக்கின்றது
இக்் கவிதலைப்பின் ஊடே

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading