சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1723!

விளங்கிக் கொள்ளாதது ஏன்!

அறிவுகள் ஆறு
ஆற்றலின் வேராய்
அமைந்தது மானிடப்
பேறு அது பெரும் ஆணிவேரு!!

அறிவுக் கண்கள்
அழகுடன் திறக்க
ஆற்றலுடைக் கல்வி
அவசியம் உணர்ந்து
கற்றே உயரும்
மானிடம் தன்னால்
மதிக்கும் பாரும் !!

புரிதல் என்பதே
அரிதாகிப் போக
சொல்வதைக் காதில்
ஏற்காது போகும்
சிந்தை அற்ற மனங்கள்
எப்படிச் சிகரம்
தொட்டிட முடியும்?!
சிவதர்சனி இராகவன்
17/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading