தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1834!

விழிப்புத் தேவை!

ஐ நா மன்றதனால்
அனைத்துக்கும்
ஒவ்வொரு நாள்
அகிலம் விழிக்க
அமைத்த சில நாள்
விழித்துக் கொள்ள
விடியல் காண
நிலைத்தது ஏட்டில்
நித்தம் நினைவில்…!

நொடிகள் கரைவது
விழிகளில் புலனாகா
மடியும் நாட்களும்
மனத்தினில் விலகா
எண்ணத்தில் கொள்வது
எமக்கே சிறப்பு
என்றும் விழிப்பே
மனித உயர்வு!

வருமுன் காப்பதும்
வந்தபின் எதிர்த்து நிற்பதும்
வீழ்ந்தால் எழுவதும்
விழிப்பினால் வருவதே!
சிவதர்சனி இராகவன்
28/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading