இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1834!

விழிப்புத் தேவை!

ஐ நா மன்றதனால்
அனைத்துக்கும்
ஒவ்வொரு நாள்
அகிலம் விழிக்க
அமைத்த சில நாள்
விழித்துக் கொள்ள
விடியல் காண
நிலைத்தது ஏட்டில்
நித்தம் நினைவில்…!

நொடிகள் கரைவது
விழிகளில் புலனாகா
மடியும் நாட்களும்
மனத்தினில் விலகா
எண்ணத்தில் கொள்வது
எமக்கே சிறப்பு
என்றும் விழிப்பே
மனித உயர்வு!

வருமுன் காப்பதும்
வந்தபின் எதிர்த்து நிற்பதும்
வீழ்ந்தால் எழுவதும்
விழிப்பினால் வருவதே!
சிவதர்சனி இராகவன்
28/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading