சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1880!

விழிப்புக்கொள் பெண்ணே…!

தலைமைப் பண்பும்
தகை சார் நெறிகளும்
விலை மதிப்பற்ற பாசமும்
வித்தகச் செருக்கும்
உனக்குள் உண்டே..
நித்தம் தோன்றும்
நிறைகளும் குறைகளும்
போரிடும் களமோ
உந்தன் வாழ்வியல்…
அனுபவக் கல்வி
அனுதினம் கிட்டும்
கனிந்திடும் குணத்தால்
கலியுகம் விரட்டு
புதுயுகம் படைக்கும்
புயலினப் பூவாய்
எழுந்திடு மகளே
ஏற்றங்கள் நினதே…
சுமைகள் கூடச்
சுகமென மாற்று
சுகந்தம் விடுதலை
சூழுமே உனைத்தினம்…!
சிவதர்சனி இராகவன்
13/10/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading