சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1897!

ஒளியின்றி ஒளிர்வேது…!

கார்கால இருள் நீக்கும்
கதிரவன் போல் இவர்கள்
கலி வாழ்வு விரட்டவே
கனிந்ததொரு பாதை சென்றார்
அணியாகச் சேர்ந்த களத்தில்
ஆக்கிய வெற்றிகள் எத்தனை
விழிதீபம் ஏற்றி வைத்து
ஒளியான வீரர் தம்மை
வழிகாட்டியான மைந்தரை
வழிபடும் காலம் இதுவாம்
ஒளியின்றி ஒளிர்வேது
களிப்பான வாழ்வு நீக்கி
களமாடிய மைந்தர் தம்மை
நினைந்தேகும் மனமே இன்று
ஒளித் தீபம் தன்னால்
பணிந்து நிற்கிறோம்…!
சிவதர்சனி இராகவன்
9/11/2023

Nada Mohan
Author: Nada Mohan