சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1915

கடந்து வந்த பாதையில்…!

இடர்கள் மிகுந்ததென்றும்
இனிமை நிறைந்ததென்றும்
உயர்வைக் கொடுத்ததென்றும்
உணர்வின் நிறைந்ததென்றும்
கடந்து வந்த பாதையில்
பதிந்ததே பல நினைவுகள்…!

எதிர்பார்ப்புகளும் கொண்டது
ஏமாற்றங்களும் தந்தது
ஏணிப்படியாய் உயர்த்தியது
ஏழ்மையும் மெல்ல விலக்கியது
எத்தனையோ சந்திப்புகள்
எழுச்சி கொண்ட படைப்புகள்
சரித்திரமாய் நிலைத்தது…!

கணக்கற்ற திட்டங்கள்
கழிந்து போன காலங்கள்
விழிகளில் மெல்லப் பதிந்தவை
வியப்போடு இதயம் தாங்கியது
பாமுகத்தின் பயணத்தின் வெற்றிகள்
யாவும் நமக்காய்ப் பதிந்தவையே..!
சிவதர்சனி இராகவன்
21/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading