சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1937

தாய்மொழி மறக்குமோ..

முகவரியாகி முடிவிலியாகி
முப்பொழுதும் தொடரும்
அகமதில் வரித்தால்
அழகெனச் சுழித்தால்
இகமெங்கும் சுகந்தரும்
இவ்வுலகில் அவதரித்ததாகும்…

மொழியிழந்த சமூகம்
தனையே தொலைக்கும்
விழி இருந்தும் பார்வைப்
புலனற்றே தவிக்கும்
மாசி இருபத்தொடு ஒன்று
உலகத் தாய்மொழி நாள்
நிலவென ஒளிரும் தமிழுக்கும்
ஓர் நாள் பாமுக அரங்கிலே..
சிவதர்சனி இராகவன்
22/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading