தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1784!

தருக்கள் உயிர்க்கும்
காலம்!

உறங்கிக் கிடந்த
தருக்களெல்லாம்
உயிர்ப்புக் கொள்ளும்
காலம் இங்கே
நிறங்கள் காட்டி
சிந்தை பறிக்கும்
மலரினம் நம்மைத்
தேடிக் கூடும் காலம்
இங்கே!!

ஒளியின் மடியில்
உயிர்களின் இருப்பு
விழிகள் மலர்ந்து
வியப்பு எய்தும் கோல
எழில் இங்கே!
ஓய்வின்றிப் புள்ளினம்
பாடல் பாடித் தம் சந்ததி
பெருக்கும்
உணர்வின் சாலம்
சாலப்பொருந்தும்
இலை துளிர் காலம்!!
சிவதர்சனி இராகவன்
22/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading