முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1784!

தருக்கள் உயிர்க்கும்
காலம்!

உறங்கிக் கிடந்த
தருக்களெல்லாம்
உயிர்ப்புக் கொள்ளும்
காலம் இங்கே
நிறங்கள் காட்டி
சிந்தை பறிக்கும்
மலரினம் நம்மைத்
தேடிக் கூடும் காலம்
இங்கே!!

ஒளியின் மடியில்
உயிர்களின் இருப்பு
விழிகள் மலர்ந்து
வியப்பு எய்தும் கோல
எழில் இங்கே!
ஓய்வின்றிப் புள்ளினம்
பாடல் பாடித் தம் சந்ததி
பெருக்கும்
உணர்வின் சாலம்
சாலப்பொருந்தும்
இலை துளிர் காலம்!!
சிவதர்சனி இராகவன்
22/3/2023

Nada Mohan
Author: Nada Mohan