இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1781!

ஆண்டுகள் இருபதொடு மூன்று!

இல்லற பந்தத்தின்
இணைந்த அகவைகள்
இருபதொடு மூன்று
இனிதே நிறைந்தது!

மங்கலத்தின் நாணினை
மங்கை என் கழுத்தில்
இட்ட நன்னாள்
நினைவினில் வந்து
நின்றே பாடுது!

மனைவி என்ற
மாண்பணிந்து
துணைவி என்னும்
பெயர் தரித்து
இணைவு கண்ட
இரு உளங்கள்
ஒருமனதாய் ஆனதே
மகிழ்வும் பூத்ததே!
சிவதர்சனி இராகவன்
6/4/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading