தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவி-1920
பொங்கும் உளமே
தங்கும் தையே…!

மங்காத மனத்திடை
பொங்கிடவே நீ வந்தாய்
எங்கெங்கும் அருள் நிறைய
அணைத்தினை வரவேற்போம்

திங்களின் ஒளியுடை
தித்திப்பே நீ யன்றோ
இங்கெமக்கு நிறை புகழை
நீ ஏந்தி வந்தாயோ

மூத்த மகளாய் நீயும்
முன் நின்று எமை சேர
சீர்பெருகும் என்றே தான்
சிரம் தாழ்த்தி வரவேற்றோம்

பொங்கட்டும் இல்லங்கள்
பொழியட்டும் இன்பங்கள்
சிறக்கட்டும் உழைப்புக்கள்
தங்கட்டும் அன்புள்ளங்கள்..!
சிவதர்சனி இராகவன்
18/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading