சிவதர்சனி இரா

வியாழன் கவி-1920
பொங்கும் உளமே
தங்கும் தையே…!

மங்காத மனத்திடை
பொங்கிடவே நீ வந்தாய்
எங்கெங்கும் அருள் நிறைய
அணைத்தினை வரவேற்போம்

திங்களின் ஒளியுடை
தித்திப்பே நீ யன்றோ
இங்கெமக்கு நிறை புகழை
நீ ஏந்தி வந்தாயோ

மூத்த மகளாய் நீயும்
முன் நின்று எமை சேர
சீர்பெருகும் என்றே தான்
சிரம் தாழ்த்தி வரவேற்றோம்

பொங்கட்டும் இல்லங்கள்
பொழியட்டும் இன்பங்கள்
சிறக்கட்டும் உழைப்புக்கள்
தங்கட்டும் அன்புள்ளங்கள்..!
சிவதர்சனி இராகவன்
18/1/2024

Nada Mohan
Author: Nada Mohan