” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவி-1920
பொங்கும் உளமே
தங்கும் தையே…!

மங்காத மனத்திடை
பொங்கிடவே நீ வந்தாய்
எங்கெங்கும் அருள் நிறைய
அணைத்தினை வரவேற்போம்

திங்களின் ஒளியுடை
தித்திப்பே நீ யன்றோ
இங்கெமக்கு நிறை புகழை
நீ ஏந்தி வந்தாயோ

மூத்த மகளாய் நீயும்
முன் நின்று எமை சேர
சீர்பெருகும் என்றே தான்
சிரம் தாழ்த்தி வரவேற்றோம்

பொங்கட்டும் இல்லங்கள்
பொழியட்டும் இன்பங்கள்
சிறக்கட்டும் உழைப்புக்கள்
தங்கட்டும் அன்புள்ளங்கள்..!
சிவதர்சனி இராகவன்
18/1/2024

Nada Mohan
Author: Nada Mohan