16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவதர்சனி
வியாழன் கவி 1578!
நம்பிக்கை வைத்திடு!
சுற்றும் கோள்களும் சுழலும்
சுமையெனத் தன்பணி மறவா
கத்தும் கடலலை எழுமே
காரணம் எதுவும் உரைக்கா!!
நிற்கும் தருக்களும் தருமே
நிழலெனத் தன்பணி யுரைத்தே
நிலவும் வான்மீதில் உலவும்
நிறைமதி என்றொரு நாளுக்காய்!!
எத்தனை எத்தனை அதிசயம்
எங்கு காணிலும் கண்ணில் படும்
ஆங்கோர் அதிசயம் நான் என்னும்
நாளும் வருமே நம்பிக்கையோடு!!
ஏற்றம் வரும் இறக்கம் வரும்
எண்ணங்கள் சிதறும் மறுப்பேது
ஏணிப்படிகளும் இறக்கக் குழியும்
ஒரு வழிப் பயணத்தில் சந்திக்கும்!!
வாழ்வெனும் மேடை வரலாறாகும்
வாழ்ந்தவர் தடங்களும் ஏடாகும்
நீர்த்துளி பெருகும் விரல் துடைத்து
வீரம் கொண்டெழு நம்பிக்கையோடு
சிவதர்சனி இராகவன்
10/2/2022

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...