மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1578!
நம்பிக்கை வைத்திடு!

சுற்றும் கோள்களும் சுழலும்
சுமையெனத் தன்பணி மறவா
கத்தும் கடலலை எழுமே
காரணம் எதுவும் உரைக்கா!!

நிற்கும் தருக்களும் தருமே
நிழலெனத் தன்பணி யுரைத்தே
நிலவும் வான்மீதில் உலவும்
நிறைமதி என்றொரு நாளுக்காய்!!

எத்தனை எத்தனை அதிசயம்
எங்கு காணிலும் கண்ணில் படும்
ஆங்கோர் அதிசயம் நான் என்னும்
நாளும் வருமே நம்பிக்கையோடு!!

ஏற்றம் வரும் இறக்கம் வரும்
எண்ணங்கள் சிதறும் மறுப்பேது
ஏணிப்படிகளும் இறக்கக் குழியும்
ஒரு வழிப் பயணத்தில் சந்திக்கும்!!

வாழ்வெனும் மேடை வரலாறாகும்
வாழ்ந்தவர் தடங்களும் ஏடாகும்
நீர்த்துளி பெருகும் விரல் துடைத்து
வீரம் கொண்டெழு நம்பிக்கையோடு
சிவதர்சனி இராகவன்
10/2/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading