28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
சிவதர்சனி
வியாழன் கவி 1578!
நம்பிக்கை வைத்திடு!
சுற்றும் கோள்களும் சுழலும்
சுமையெனத் தன்பணி மறவா
கத்தும் கடலலை எழுமே
காரணம் எதுவும் உரைக்கா!!
நிற்கும் தருக்களும் தருமே
நிழலெனத் தன்பணி யுரைத்தே
நிலவும் வான்மீதில் உலவும்
நிறைமதி என்றொரு நாளுக்காய்!!
எத்தனை எத்தனை அதிசயம்
எங்கு காணிலும் கண்ணில் படும்
ஆங்கோர் அதிசயம் நான் என்னும்
நாளும் வருமே நம்பிக்கையோடு!!
ஏற்றம் வரும் இறக்கம் வரும்
எண்ணங்கள் சிதறும் மறுப்பேது
ஏணிப்படிகளும் இறக்கக் குழியும்
ஒரு வழிப் பயணத்தில் சந்திக்கும்!!
வாழ்வெனும் மேடை வரலாறாகும்
வாழ்ந்தவர் தடங்களும் ஏடாகும்
நீர்த்துளி பெருகும் விரல் துடைத்து
வீரம் கொண்டெழு நம்பிக்கையோடு
சிவதர்சனி இராகவன்
10/2/2022

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...