21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவதர்சனி
வியாழன் கவி 1578!
நம்பிக்கை வைத்திடு!
சுற்றும் கோள்களும் சுழலும்
சுமையெனத் தன்பணி மறவா
கத்தும் கடலலை எழுமே
காரணம் எதுவும் உரைக்கா!!
நிற்கும் தருக்களும் தருமே
நிழலெனத் தன்பணி யுரைத்தே
நிலவும் வான்மீதில் உலவும்
நிறைமதி என்றொரு நாளுக்காய்!!
எத்தனை எத்தனை அதிசயம்
எங்கு காணிலும் கண்ணில் படும்
ஆங்கோர் அதிசயம் நான் என்னும்
நாளும் வருமே நம்பிக்கையோடு!!
ஏற்றம் வரும் இறக்கம் வரும்
எண்ணங்கள் சிதறும் மறுப்பேது
ஏணிப்படிகளும் இறக்கக் குழியும்
ஒரு வழிப் பயணத்தில் சந்திக்கும்!!
வாழ்வெனும் மேடை வரலாறாகும்
வாழ்ந்தவர் தடங்களும் ஏடாகும்
நீர்த்துளி பெருகும் விரல் துடைத்து
வீரம் கொண்டெழு நம்பிக்கையோடு
சிவதர்சனி இராகவன்
10/2/2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...