ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி-1731

சிவனே என்று இருந்துவிடு!

எத்தனை முறை
முயன்றாலும்
தோற்றுப் போகும்
வேளைகளும் உண்டு
எனக்கெதற்கென்று
இருக்கும் வரை
வெற்றியும் வருவதுண்டு!

முயலுகின்ற வழிகள்
கண்டு மெல்ல
இயலாமை விலக்கி
கொள்ள வேண்டும்
இன்னும் தடுக்க வரும்
கரங்களை மெல்ல
இயல்பாய் விலக்கியே!

தன்னைத் தானே
பாவம் பார்த்து
தனக்குத் தானே
ஆறுதல் சொல்லி
வாழுகின்ற சிலபேர்
வாழத்தான் செய்கிறார்!

உதவி என்று வந்து
உபத்திரவம் செய்ய
உதவும் கரங்கள்
வேண்டாம் உன்கரம்
உனக்குத் துணை!
சிவதர்சனி இராகவன்
31/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading