சிவதர்சனி

வியாழன் கவி-1731

சிவனே என்று இருந்துவிடு!

எத்தனை முறை
முயன்றாலும்
தோற்றுப் போகும்
வேளைகளும் உண்டு
எனக்கெதற்கென்று
இருக்கும் வரை
வெற்றியும் வருவதுண்டு!

முயலுகின்ற வழிகள்
கண்டு மெல்ல
இயலாமை விலக்கி
கொள்ள வேண்டும்
இன்னும் தடுக்க வரும்
கரங்களை மெல்ல
இயல்பாய் விலக்கியே!

தன்னைத் தானே
பாவம் பார்த்து
தனக்குத் தானே
ஆறுதல் சொல்லி
வாழுகின்ற சிலபேர்
வாழத்தான் செய்கிறார்!

உதவி என்று வந்து
உபத்திரவம் செய்ய
உதவும் கரங்கள்
வேண்டாம் உன்கரம்
உனக்குத் துணை!
சிவதர்சனி இராகவன்
31/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading