சிவதர்சனி

வியாழன் கவி-1613
சித்திகள் தருவாய் சித்திரையே!

எத்திக்கும் விடியல் எழுச்சி கொள்ள
ஏக்கங்கள் தாக்கங்கள் விலகிக்
கொள்ள
சித்திகள் தரவே பிறந்தனையோ
சித்திரையே இத்தரை மெல்ல வந்தாய்!!

வித்தகம் கொண்டே விதையிடவே
விருட்சமாய் வாழ்வு வளம் பெறவே
பங்குனி மங்கை சோதரியாய்
மலர்ந்தனையோ மாதவம் என்றிங்கே!!

முத்திரை ஒன்றை பெற்றிடவே
முகவரி தன்னை நிலை நாட்டிடவே
உந்தன் கரமும் பற்றி விட்டோம்
உயர்வாய் உலகை உயர்த்திடுவாய்!!
சிவதர்சனி இராகவன்
14/4/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading