இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1621!

வேண்டும் வலிமை!

உள்ளத்துள் வலிமை உண்டாகில்
உலகை வென்றிட முடியும்
இல்லை என்றே எண்ணத்தை
வளர்த்துவிடின் பொய்க்கும் புலமை!

பிறப்பில் ஏது ஏற்றத்தாழ்வுகள்
பிழைத்திட வேண்டும் வல்லமைகள்
குறைகள் தன்னை நிறைவாய் மாற்ற
திறமை தானே மருந்தாய் ஆகும்!

சாதனை ஏட்டில் பதிந்த மனிதர்
சோதனை பலதைக் கடந்த முனிவர்
வேதனை கண்டு ஒதுங்க வில்லை
வென்றதன் மகிமை காலம் சொல்லும்!

வலிமை வேண்டும் மானிடா-அதை
தெளிந்து வாழப் பழகிக்கொள்
வாழ்க்கை என்னும் ஆழி தன்னில்
வீழ்ந்தும் எதிர் நீச்சல் போட்டு வெல்!

குறையென்று ஒதுக்க வேண்டாம்
குன்றின் மீது ஒளிரச் செய்வோம்
மகுடம் சூட்டி அழகு பார்க்க
மலர்கள் யாவும் வாசனை வீசும்!!
சிவதர்சனி இராகவன்
28/4/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading