சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம் 1638!

அன்றிட்ட தீ!

அன்றிட்ட தீ அணைத்துச் சாம்பலாக்கியது ஒன்றா இரண்டா
ஓராயிரம் நூல்களை அல்லவா!

அறிவுப் பசி தீர்க்கும் அட்சய
பாத்திரங்கள் அனலிடைக்
கருகியது எத்தனை கொடூரம்!

அரக்கத்தனத்தின் அதியுச்ச
ஆட்டம் அநீதி அகந்தை
அழித்தவர் எண்ணம் ஈடேறுமா!

வெட்ட வெட்டத் தழைக்கும்
ஆலவிருட்சமாய் எம் தலை
முறை எட்டுத் திக்குமாய்!

விழுந்தோம் எழுந்தோம்
விதைத்தோம் அறுவடை
செய்வோம் நம் ஆற்றலை!

நிழலாடும் நினைவுகளாய்
இன்றோ எழுந்து வீரமுடன்
காட்சிதருகிறாள் கலைமகள்!
சிவதர்சனி இராகவன்
8/6/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading