16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவதர்சனி
வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம்-1646
மீளெழுங்காலம்!
அகத்தைத் தொலைத்தவராய்
அன்று தேசம் விட்டோடி
நாடோடிகளாய் இன்னும் இன்னும்
மீளெழுகைக்காய் காத்திருப்பு!!
எல்லைகள் கடந்து இழந்தது பாதி
எஞ்சியிருப்பதைக் காக்க மீதி
எச்சங்களைப் பதியமிட போராடி
மீழெழுங்காலம் வேர்பதிக்க ஓடோடி
கிடைத்ததொரு நிலமதில் வாழ்வு
கிளர்ந்தெழும் நொடிகளின் தேர்வு
ஏக்கங்கள் விரட்டியொரு தீர்வு
எமக்கான விடிவாய்த்தேடியபொழுது
பொறுத்தது போதும் என்றே குரல்
பொங்கி வந்து செவி வீழும் கணம்
வானோடி வழி நெடுக நீராடி
எழுந்திடுவோம் நம் மொழி சூடி!!
சிவதர்சனி இராகவன்
22/6/2022

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...