மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம்-1646

மீளெழுங்காலம்!

அகத்தைத் தொலைத்தவராய்
அன்று தேசம் விட்டோடி
நாடோடிகளாய் இன்னும் இன்னும்
மீளெழுகைக்காய் காத்திருப்பு!!

எல்லைகள் கடந்து இழந்தது பாதி
எஞ்சியிருப்பதைக் காக்க மீதி
எச்சங்களைப் பதியமிட போராடி
மீழெழுங்காலம் வேர்பதிக்க ஓடோடி

கிடைத்ததொரு நிலமதில் வாழ்வு
கிளர்ந்தெழும் நொடிகளின் தேர்வு
ஏக்கங்கள் விரட்டியொரு தீர்வு
எமக்கான விடிவாய்த்தேடியபொழுது

பொறுத்தது போதும் என்றே குரல்
பொங்கி வந்து செவி வீழும் கணம்
வானோடி வழி நெடுக நீராடி
எழுந்திடுவோம் நம் மொழி சூடி!!
சிவதர்சனி இராகவன்
22/6/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading