” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

வீரம் விளைந்து நின்ற தேசம்
வெஞ்சமராடி புலி வென்ற எம் ஈழம்
பேரரும் பலம் கொண்ட நாட்டார்
பெரும் பலம் தந்தது அரசுக்கு கூட்டாய்
மூ அரும் படை கொண்ட புலியை
மூச்சர வைத்தனர் போரதன் முடிவில்
நாற்பது லட்சம்மேல் மாள
நம்மவர் பூமியில் ஆமியின் ஆட்சி

மீளவும் போர்திறன் சேர
மெல்ல தமிழர் மீண்டெழல் சோர
ஆள்பவர் செய்தனர் சூட்சி
ஆமிகள் மூலம் போதையை ஊக்கி
வாலிபர் வனிதையர் வாயில்
வைத்தர் கஞ்சா,கொக்ரெயின் ஆதி
காலிகள் தேசம் இன் ஈழம்
காவிகள் ஊக்குதல் ஈழமே நாசம்
சிங்களம் வைத்த தீ போதை
திரண்டிப்போ எரிக்குது தெற்கையும் பாரீர்
எங்கனும் வியாபாரம் ஆகி
இலவச வஸ்துகள் மாணவர்க்காகி
இங்கஙம் போதையில் ஊற
ஏற்ற தோர் ஊக்கம் இயல்பாக பாய
வஞ்சினம் வாள்வெட்டு களவு
வலிந்த புணர்வு இலங்கையே அதிர்வு
பிஞ்சிலே பழுத்தனர் இளைஞர்
பேய்களின் ஆட்சியில் பிணம் தின்னும் நிலைகள்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading