நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு231-

பாலை நிலமாக பழைய காலம்-பின்
பசுமை நிலமானதாம் உழைப்பால் யாழ்ப்பாணம்..

ஆழக்கிணறு வெட்டி பின்
ஆழ்துளை குழாய் கிணறு வைத்து
வாழ தொடர்ந்து உழைத்து
வளம் கண்ட யாழ்ப்பாணம்.
படிப்பு,உழைப்பு,பண்பாடு
கூட்டுறவு
எடுத்த காரியம் முடிப்பு
எங்கும் முயற்சி துடிப்பு.
எங்கே போனது எல்லாம்
எதையும் காணோமே
சோம்பல்,சொகுசு தேடல்
காசை கரைப்பதில் வீறு
வாள் வெட்டு,கொள்ளை
வழிப்பறி,கல்வியும் பாழ்
ஆளை ஆள் நம்பாத அடிதடி
காணி பிடிப்பு,கற்பழிப்பு
வன்முறை,வீதி தொறும் தினம்
விபத்து,
சாபமோ,கேடோ,
உள்ள ஆழ் ஊற்று எல்லாம்
காவி படிவு
மழை இல்லா வரட்சி
மீண்டும் பாலை நிலமாகுதோ
யாழ்ப்பாணம்
போர் போர் என்றோம்
இன்றோ ஆள் இல்லா வீடுகள்
அடியார் இல்லா கோயில்கள்
பண்பில்லாத நடத்தைகள்
பாழாகுது யாழ்ப்பாணம்

-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading