சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு231-

பாலை நிலமாக பழைய காலம்-பின்
பசுமை நிலமானதாம் உழைப்பால் யாழ்ப்பாணம்..

ஆழக்கிணறு வெட்டி பின்
ஆழ்துளை குழாய் கிணறு வைத்து
வாழ தொடர்ந்து உழைத்து
வளம் கண்ட யாழ்ப்பாணம்.
படிப்பு,உழைப்பு,பண்பாடு
கூட்டுறவு
எடுத்த காரியம் முடிப்பு
எங்கும் முயற்சி துடிப்பு.
எங்கே போனது எல்லாம்
எதையும் காணோமே
சோம்பல்,சொகுசு தேடல்
காசை கரைப்பதில் வீறு
வாள் வெட்டு,கொள்ளை
வழிப்பறி,கல்வியும் பாழ்
ஆளை ஆள் நம்பாத அடிதடி
காணி பிடிப்பு,கற்பழிப்பு
வன்முறை,வீதி தொறும் தினம்
விபத்து,
சாபமோ,கேடோ,
உள்ள ஆழ் ஊற்று எல்லாம்
காவி படிவு
மழை இல்லா வரட்சி
மீண்டும் பாலை நிலமாகுதோ
யாழ்ப்பாணம்
போர் போர் என்றோம்
இன்றோ ஆள் இல்லா வீடுகள்
அடியார் இல்லா கோயில்கள்
பண்பில்லாத நடத்தைகள்
பாழாகுது யாழ்ப்பாணம்

-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading