முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

அன்னை
************
என்னைச் சுமந்தவள் ஏற்றமுடன் வாழ்ந்தவள்
தன்னையும் நினைக்க வைப்பாள் பதினெட்டுவருடமாச்சே

கண்ணின் மணியாக நின்றுமே காத்தவளே
பண்பின் சிகரமடி பாரோங்கிய மாதாவே

அன்பின் நிலைக்காக ஏங்கியும் தவிக்கின்றோமே
மன்னுயிர்கள் எல்லாம் மடிவதும் உண்மையே

தெரிந்தும் உன்னினைவால் வாடுகின்றேன் தாயே

புரிந்தும் புண்படுகிறதே அம்மா உன்னினைப்பு

தனிமரமாய் தாங்கிய கோபுரமே அம்மா

கனியமொழி கூறியே காத்துவளர்த்த அம்மா
தன்னலம் பாராது பிறநலமும் பார்த்தாய்

புறந்தள்ள முடியாத புனிதமான தெய்வம்

பறைதட்டிக் கூப்பிட்டாலும் பறந்து வரமாட்டாய்

தினம்தினம் நினைந்து நின்றுடவே நீயும்

மனமென்னும் மாளிகையில் இருந்துவிடு தாயே

கனம்பண்ணிக் கரம்கூப்பி வடித்தேனே கவியொன்றன்னை

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading