” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

அன்னை
************
என்னைச் சுமந்தவள் ஏற்றமுடன் வாழ்ந்தவள்
தன்னையும் நினைக்க வைப்பாள் பதினெட்டுவருடமாச்சே

கண்ணின் மணியாக நின்றுமே காத்தவளே
பண்பின் சிகரமடி பாரோங்கிய மாதாவே

அன்பின் நிலைக்காக ஏங்கியும் தவிக்கின்றோமே
மன்னுயிர்கள் எல்லாம் மடிவதும் உண்மையே

தெரிந்தும் உன்னினைவால் வாடுகின்றேன் தாயே

புரிந்தும் புண்படுகிறதே அம்மா உன்னினைப்பு

தனிமரமாய் தாங்கிய கோபுரமே அம்மா

கனியமொழி கூறியே காத்துவளர்த்த அம்மா
தன்னலம் பாராது பிறநலமும் பார்த்தாய்

புறந்தள்ள முடியாத புனிதமான தெய்வம்

பறைதட்டிக் கூப்பிட்டாலும் பறந்து வரமாட்டாய்

தினம்தினம் நினைந்து நின்றுடவே நீயும்

மனமென்னும் மாளிகையில் இருந்துவிடு தாயே

கனம்பண்ணிக் கரம்கூப்பி வடித்தேனே கவியொன்றன்னை

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan