சிவருபன் சர்வேஸ்வரி

அன்னை
************
என்னைச் சுமந்தவள் ஏற்றமுடன் வாழ்ந்தவள்
தன்னையும் நினைக்க வைப்பாள் பதினெட்டுவருடமாச்சே

கண்ணின் மணியாக நின்றுமே காத்தவளே
பண்பின் சிகரமடி பாரோங்கிய மாதாவே

அன்பின் நிலைக்காக ஏங்கியும் தவிக்கின்றோமே
மன்னுயிர்கள் எல்லாம் மடிவதும் உண்மையே

தெரிந்தும் உன்னினைவால் வாடுகின்றேன் தாயே

புரிந்தும் புண்படுகிறதே அம்மா உன்னினைப்பு

தனிமரமாய் தாங்கிய கோபுரமே அம்மா

கனியமொழி கூறியே காத்துவளர்த்த அம்மா
தன்னலம் பாராது பிறநலமும் பார்த்தாய்

புறந்தள்ள முடியாத புனிதமான தெய்வம்

பறைதட்டிக் கூப்பிட்டாலும் பறந்து வரமாட்டாய்

தினம்தினம் நினைந்து நின்றுடவே நீயும்

மனமென்னும் மாளிகையில் இருந்துவிடு தாயே

கனம்பண்ணிக் கரம்கூப்பி வடித்தேனே கவியொன்றன்னை

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading