” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

மனிதத்தின் நேயமே
<<<<<<<<>><<<<<<<<<

நேயம் கொண்ட உள்ளமதில் கள்ளமிருக்காது

நியாயம் தவறாப் பாதையிலே பயணமேவுமே

நல்லவுள்ளம் நாட்டினிலே நயந்து நிற்குமே
நாளும் துன்பம் தீரத்திடவே வழியேகுமே

பண்பு கொண்ட வழியும் பாங்கானது
பாகமில்லாத நிலையும் திறன் நேயமாகுமே

வஞ்சமில்லா வாழ்வழிக்க வரமும் வேண்டுமே

துஞ்சிநின்று துவண்டிடாத துணிவும் வேண்டுமே

கண்ணிய இலட்சியம் நிலைக்க வேண்டுமே
கனிவு கொண்ட மனிதர் சிறந்திடவே

காலம் தன்னில் மனிதமும் வாழுமே

குவலயம் மிளிர குமுதமும் வீசட்டுமே

பணிவு கொண்டு எழுந்த போது

பகையும் விலகவேண்டும் நிலையும் வேண்டுமே

வீழும் காலம் நமக்கு வேண்டாம்
விழுமியமும் காப்போம்
பாரில் என்றுமே

மனிதா மனிதத்தை நீயும தொலைத்து விடாதே

மனிதத்தின் நேயமே மனிதமும் ஆகுமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan