” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே

பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே

பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே

இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே

இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே

பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே

பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா

பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்

கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்

கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே

ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே

வாழ்க வாழ்க வாழியவே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan