தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூபன்சர்வேஸ்வரி.

கல்வியறிவில்லை எனில்..

ஏலம் போடுவதறிவுவல்ல
ஏகமானதுவுமறிவல்ல
ஏமாற்ற மடைவதும் நிலையல்ல
ஏனிப்படி மேலேறுவது போன்று
ஓடி வருவது தானறிவு.

எழுத்தறிவு இல்லாமல் மனிதன் வாழ்ந்தால்
ஏமாளியாக்கி பங்கு பிரிப்பார்
எச்சபைதனிலும் அச்சமின்றி
எடுத்துரைக்கவும் எழுத்தறிவு தேவை

கற்றபலன் சென்றவிடம் சிறக்கும்
கல்லாதவன் புகழ் குடத்தினுள் வெளிச்சம் போன்று
எழுத்தறி வென்பது மனிதனுக்கவசியம்
அதையுணர்வது மனிதனுக்கு முக்கியம்

எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகுமென
எழுத்தறிவித்தவன் இறைவனென்பார்- அதை
அறியாமல் வாழ்ந்தால்
மூடரென்பர்.

எங்கும், எதிலும், எப்போதும்
ஒப்பரவொழுகி எழுத்தறிவுள்ளவன்
நன்று காரியம் முடித்து நிற்பான்
மாண்புடன் சிறந்து மனிதனாய் உயர
எழுத்தறி வெண்பது நல்லதோராயுதம்

அறிவாயுதம் கூராகி நின்றால்
திறனாய்யுதம் தித்திப்பாயினிக்கும்
தரம் தனில் தீரம் இல்லையெனில்
பட்ட மரமொன்றிற்கு ஒப்பாகுமே..!
-கவிஞர் சிவரூபன்சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading