மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரூபன்சர்வேஸ்வரி.

கல்வியறிவில்லை எனில்..

ஏலம் போடுவதறிவுவல்ல
ஏகமானதுவுமறிவல்ல
ஏமாற்ற மடைவதும் நிலையல்ல
ஏனிப்படி மேலேறுவது போன்று
ஓடி வருவது தானறிவு.

எழுத்தறிவு இல்லாமல் மனிதன் வாழ்ந்தால்
ஏமாளியாக்கி பங்கு பிரிப்பார்
எச்சபைதனிலும் அச்சமின்றி
எடுத்துரைக்கவும் எழுத்தறிவு தேவை

கற்றபலன் சென்றவிடம் சிறக்கும்
கல்லாதவன் புகழ் குடத்தினுள் வெளிச்சம் போன்று
எழுத்தறி வென்பது மனிதனுக்கவசியம்
அதையுணர்வது மனிதனுக்கு முக்கியம்

எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகுமென
எழுத்தறிவித்தவன் இறைவனென்பார்- அதை
அறியாமல் வாழ்ந்தால்
மூடரென்பர்.

எங்கும், எதிலும், எப்போதும்
ஒப்பரவொழுகி எழுத்தறிவுள்ளவன்
நன்று காரியம் முடித்து நிற்பான்
மாண்புடன் சிறந்து மனிதனாய் உயர
எழுத்தறி வெண்பது நல்லதோராயுதம்

அறிவாயுதம் கூராகி நின்றால்
திறனாய்யுதம் தித்திப்பாயினிக்கும்
தரம் தனில் தீரம் இல்லையெனில்
பட்ட மரமொன்றிற்கு ஒப்பாகுமே..!
-கவிஞர் சிவரூபன்சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading